TNPSC tamil (Thodarum Thodarpum arithal )– தொடரும் தொடர்பும் அறிதல் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்..

 TNPSC tamil (Thodarum Thodarpum arithal )– தொடரும் தொடர்பும் அறிதல் பற்றிய செய்தி குறிப்புகள் மற்றும் வினாக்கள்..

இலக்கியங்களைப் படைத்தோர்களை சில சிறப்புப் பெயர்களால் அழைப்பது தமிழ் மரபு தமிழறிஞர்களின் சிறப்புப் பெயர்கள் அவர்களின் செயல் மற்றும் படைப்புகளால் வழங்கப்படுகிறது.


இப்பகுதி வினாக்கள் பொதுவாக நேரடி வினாக்களாக அமைக்கப்படுகின்றன. அதற்கேற்ப தமிழறிஞர்களின் சிறப்புப் பெயர்கள் மற்றும் அவர்களது மேற்கோள்களையும் தேர்வு நோக்கில் அவசியமானதை தொகுத்துள்ளோம். எனவே இவற்றை நன்கு படித்து மனதில் நிறுத்திக் கொண்டால் இப்பகுதியிலிருந்து வரும் வினாக்களுக்கு முழு மதிப்பெண்களையும் பெற்றுவிடலாம் என்பது திண்ணம்.

தமிழறிஞர்களின் சிறப்புப் பெயர்கள்

திருவள்ளுவர்

  • தெய்வப்புலவர்
  • நான்முகனார்
  • மாதானுபங்கி
  • சென்னாப்போதகர்
  • பெருநாவலர்
  • பாயில் புலவர் நாயனார்
  • தேவர்
  • முதற்பாவலர்

இராமலிங்க அடிகள்

  • வள்ளலார்
  • அடிகளார்

திருநாவுக்கரசு

  • ஆளுடையரசு
  • மருள் நீக்கயார்
  • அப்பர்

திருஞானசம்பந்தர்

  • ஆளுடையப்பிள்ளை
  • திராவிட சிசு

காரைக்கால் அம்மையார்

  • பேயார்

கபிலர்

  • குறிஞ்சிக்கோமான்
  • கவிச்சக்கரவர்த்தி
  • கல்வியில் பெரியவர்

சேக்கிழார்

  • தொண்டர் சீர் பரவுவார்

ஆண்டாள்

  • சூடிக்கொடுத்த சுடர்கொடி
  • வைணவம் தந்த செல்வி

பண்டிகை அசலாம்பிகை

  • 20-ம் நூற்றாண்டு ஒளைவயார்

நச்சினார்க்கினியர்

  • உச்சிமேற்கொள் புலவர்

பெருஞ்சித்திரனார்

  • பாவலர் ஏறு

தேவநேயப்ப பாவாணர்

  • மொழிஞாயிறு

வீரகவிராயர்

  • அந்தக்கவி

காளமேகப்புலவர்

  • ஆசகவி

திரு.வி.க.

  • தமிழ்தென்றல்
  • தமிழ் முனிவர்
  • தமிழ் பெரியார்
  • தொழிலாளர்களின் தந்தை

சி.சுப்பிரமணிய பாரதியார்

  • தேசிய கவி
  • விடுதலைக் கவி
  • மகாகவி
  • பாட்டுக்கொரு புலவன்
  • புதுக்கவிதை தந்தை

சுப்பு இரத்தினதாசன்

  • பாவேந்தர்
  • பாரதிதாசன்
  • புரட்சிக் கவிஞர்
  • இயற்கைக் கவிஞர்
  • புதுமைக் கவிஞர்

உ.வே.சாமிநாதையர்

  • தமிழ்தாத்தா

மீனாட்சி சுந்தரம் பிள்ளை

  • நவீன கம்பர்

புதுமைப்பித்தன்

  • சிறுகதை மன்னன்
  • தமிழ்நாட்டின் மாப்பாசான்

கல்கி இரா.கிருஷ்ண மூர்த்தி

  • சிறுகதையின் தந்தை
  • வரலாற்று நாவலின் தந்தை
  • தமிழ்நாட்டின் வால்ட்டர் ஸ்காட்

சோமசுந்தர பாரதியார்

  • நாவலர்

அறிஞர் அண்ணா

  • பேரறிஞர்
  • தென்னாட்டு பெர்னாட்ஷா
  • தென்னாட்டு காந்தி

மு.வரதராசன்

  • தமிழ்நாட்டு பெர்னாட்ஷா

பம்மல் சம்பந்த முதலியார்

  • நாடகத்தந்தை

சங்கரதாஸ் சுவாமிகள்

  • நாகடத் தலமையாசிரியர்

இராச அண்ணாமலைச் செட்டியார்

  • தனித்தமிழ் இசைக்காவலர்

வாணிதாசன்

  • தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த்
  • கவிஞரேறு

தேசிய விநாயகம் பிள்ளை

  • கவிமணி

அழ. வள்ளியப்பா

  • குழந்தை கவிஞர்

ஜெயகாந்தன்

  • தென்னாட்டின் மாப்பசான்
  • தற்கால சிறுகதை மன்னன்

வால்ட்டர் ஸ்காட்

  • உலகச் சிறுகதையின் தந்தை

டேவிட் விர்த் கிரடித்

  • உலக சினிமாவின் தந்தை

தாதே சாகிப் பால்கே

  • இந்திய சினிமாவின் தந்தை

கி.ஆ.பெ.விஸ்வநாதன்

  • முத்தமிழ்க் காவலர்

இராமலிங்கனார்

  • ஆட்சி மொழிக்காவலர்

அண்ணாமலை ரெட்டியார்

  • காவடிச் சிந்துக்கு தந்தை

HA கிருட்டிணப்பிள்ளை

  • கிருத்துவக் கம்பர்

நாமக்கல் கவிஞர்

  • காந்தியக் கவிஞர்

வெங்கடாச்சலம் பிள்ளை

  • ஆஸ்தான கவிஞர்

மீனாட்சி சுந்தரம் பிள்ளை

  • மகாவித்துவான்

இரா.பி.சேதுபிள்ளை

  • சொல்லின் செல்வர் (இலக்கியம்)

ஈ.வெ.கி.சம்பத்

  • சொல்லின் செல்வர் (அரசியல்)

ஈ.வெ.ராமசாமி

  • பெரியார்
  • பகுத்தறிவு பகலவன்
  • சுயமரியாதைச் சுடர்
  • வெந்தாடி வேந்தர்
  • வைக்கம் வீரர்
  • ஈரோட்டுச் சிங்கம்
  • தெர்காசியாவின் சாக்ரடீஸ்
  • பெண்ணினப் போர்முரசு
  • புத்தலகத் தொலைநோக்காளர்

இராஜாஜி

  • மூதறிஞர்

வ.உ.சிரம்பரனார்

  • செக்கிழுத்த செம்மல்
  • கப்பலோட்டிய தமிழன்
  • தென்னாட்டுத் திலகர்

க.சுப்பிரமணியப் பிள்ளை

  • சி.சு. பிள்ளை
  • தமிழ் இலக்கிய வரலாற்றை தமிழில் எழுதியவர்

வெங்கடாச்சலம் பிள்ளை

  • கரந்தை கவியரசு

எம்.எஸ்.சுப்புலெட்சுமி

  • இசைக்குயில்

வேத இரத்தினப் பிள்ளை

  • சர்தார்

வி.முனுசாமி

  • திருக்குறளார்

செய்குத் தம்பியார்

  • சதவதானி

அப்துல் இரகுமான்

  • கவிக்கோ

சிங்காரவேலனார்

  • மே தினம் கண்டவர்

ம.பொ.சிவஞானம்

  • சிலப்புச் செல்வர்

சுந்தரம் பிள்ளை

  • பேராசிரியர்

கரந்தைக் கவியரசு

  • கரந்தைக் கவியரசு வேங்கடாச்சலம் பிள்ளை

அப்பாத்துரை

  • பன்மொழிப்புலவர்

தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்

  • பன்மொழி வித்தகர்

ந.பிச்சமூர்த்தி

  • புதுக்கவிதைகளின் தந்தை

வீரமாமுனிவர்

  • இஸ்மத் சன்னியாசி (தூய துறவி)

அனுமான்

  • சொல்லின் செல்வன்

இளங்குமரனார்

  • தமிழ்த்திரு

தமிழழகனார்

  • சந்தக்கவிமணி

மேற்கோள்கள்

“திருவள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே” – பாரதிதாசன்.

“திருக்குறளில் இல்லாதது இல்லை, இணை இல்லை முப்பாலுக்கு இந்நிலத்தே” – பாரதிதாசன்.

மலையத்துவசன் மகன் ஞானப்பிரகாசம் என்பவர் 1812-ல் திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்து வெளியிட்டார்.

திருக்குறளை போற்றிப்பாடும் நூல் – திருவள்ளவமாலை.

“வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம்
வேரூன்றி நாள் முதல் உயிர்மொழி – பெருஞ்சித்திரனார்.

திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூயமொழி தமிழ்ச் செம்மொழியாம் – பரிதிமாற்கலைஞர்.

தொன்மக்கருத்துகள் அடிப்படையில் எழாமல், மக்கள் வாழ்வியல் நெறிகளை வெளிப்படுத்துவதால் சங்க இலக்கியங்களை மக்கள் இலக்கியம் எனலாம்.

தமிழ் இலக்கணம் படிக்கப் படிக்க விருப்பத்தை உண்டாக்குவது – கெல்லட்.

தமிழை செம்மொழியாக அறிவித்த ஆண்டு 2004 (12.10.2004).

“தமிழ் மிகவும் பண்பட்ட மொழி” எனக் கூறிய மொழியியல் அறிஞர் மாக்ஸ்முல்லர்.

பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்ட செம்மொழி எனக் கூறியவர் – பாவாணர்

இன்றைய மொழியில் அறிவியல் வல்லுநர்கள் பேணிப் பின்பற்றத்தக்க வழிமுறைகளைத் தொல்காப்பியம் கூறுகிறது என்றவர் – எமினோ

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மாெழியில் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழ்உடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும் – பாரதியார்

இளங்கோவடிகள் துறவு பூண்டு தங்கிய இடம் – குணவாயிற்கோட்டம்.

“நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்” என்று போற்றியவர் – பாரதியார்

எளியநடையில் தமிழ்நூல் எழுத வேண்டும்...
இலக்கணநூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்...
செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதும்
எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை என்றால்
இங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும் – பாரதிதாசன்

தமிழ் ஒளியை மதங்ககளிலே சாய்க்காமை வேண்டும்
தகத்தகாயத் தமிழைத் தாபிப்போம் வாரீர் – பாரதிதாசன்

தொண்டு செய்து பழுத்த பழம்
தூயதாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும் – என்று பெரியாரைப் புகழந்தவர் – பாரதிதாசன்

நாட்டில் உள்ள கேடுகளில் எல்லாம் பெருங்கேடு பெண்களைப் பகுத்தறிவற்ற சீவன்களாய் வைத்திருத்தல் – பெரியார்

பெண்ணடிமைக்கு முதன்மைக் காரணம் சொத்துரிமை இல்லாதது – பெரியார்
அரசின் அனைத்து துறைகளிலும் பெண்கள் பணியாற்றும்போது நம் சமுதாயத்தில் தலைகீழ் மாற்றம் ஏற்படும் – பெரியார்.

குகனின் ஊர் 'சிருங்கிபேரம்'
“யாதினும், இனியநண்ப இருத்திஈண்டு எம்மோடு” என்று குகனிடம் இராமன் சொன்னான்.

“அன்புள்ள இனிநாம் ஓர்ஐவர்கள் உளரானோம்” ஐந்தாவது ஆள் குகன்

“நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும் செல்வம் அன்று தன் செய்வினைப் பயனே” – நற்றிணை – நல்வேட்டனார் பாடியது.

சான்றோர் செல்வம் என்று சொல்வது புகலிடம் தேடி வந்தோரைக் கைவிடாமை

“சான்றோர் சான்றோர் பாலர் ஆப. சாலார் சாலார் பாலர் ஆகுபவே” – புறநானூறு – கண்ணகனார் பாடல்

நுண்ணிய நூல்பல கற்றவர்க்கே அமைந்த அரியகலை – பேச்சுக்கலை
மேடைப்பேச்சில் மக்களை ஈர்த்தவர் – பேரறிஞர் அண்ணா, திரு.வி.க., ரா.பி.சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தரம், பாரதியார், குன்றக்குடி அடிகளார் போன்றோர் ஆவர்.

“இப்போது இங்கவன் உதவான்” என்று அப்பூதியடிகள் தன் மூத்த மகனைப் பற்றித் திருநாவுக்கரசரிடம் கூறினார் – பெரியபுராணம்

தம் வீட்டில் உள்ள அனைத்துப் பொருளுக்கும் திருநாவுக்கரசர் என்ற பெயர் சூட்டியவர் – அப்பூதியடிகள்

“பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ” – என்று சேக்கிழாரைப் புகழ்ந்தவர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்.

நடிப்பாற்றல் மிக்கவரையும் நடிப்பைக் கற்றுத் தருபவரையும் இயக்குநர் என்பர்.
படப்பிடிப்புக் கருவியை நகர்த்தும் வண்டியில் பொருத்துவதும் உண்டு.
இயக்குனரின் படங்கள் பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கும்.
ஓவியங்களைக் கொண்டு எடுக்கும் திரைப்படம் – கருத்துப்படம்.

ஓவியத்திற்கு பதில் பொம்மைகள் கொண்டு எடுக்கப்படும் படம் – இயக்குப்படம்.

“அரியாசனம் உனக்கே யானால் உனக்குச் சரியாரும் உண்டோ தமிழே” – தமிழ்விடுதூது.

“போலிப் புலவர்களைத் தலையில் குட்டியவர்” – அதிவீரராமபாண்டியன்

“போலிப் புலவர்களின் தலையை வெட்டியவர்” – ஒட்டக்கூத்தர்

“போலிப் புலவர்களின் காதை அறுத்துவர்” – வில்லிபுத்துரான்

மாந்தன் தோன்றிய இலெமுரியா கண்டத்தை “மனித நாகரிகத்தின் தொட்டில்” என்பர்.

இறைவனைப் “பண்ணொடு தமிழ் ஒப்பாய்” என்று தேவாரம் கூறுகிறது.

தமிழரின் வீரவிளையாட்டு ஏறுதழுவுதல்.
இறந்தோரை இட்புப் புதைக்கும் தாழி முதுமக்கள் தாழி
நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்
நகரில் இடர்ப்படோம் நடலை இல்லோர் – திருநாவுக்கரசர்

உலகம் – உலவு (சுற்றுதல்) என்ற சொல்லடியாகப் பிறந்தது.
ஞாலம் – ஞால் (தொங்குதல்) என்ற அடியாகப் பிறந்தது.
வளிது நிலைஇய காயம் – புறநானூறு. இது வானத்தில் காற்று இல்லாப் பகுதியும் உண்டு என்று கூறுகிறது.

“தீப்பிழி எந்திரம் பந்தல் வருந்த” பதிற்றுப்பத்து கூறுவது. கரும்புச்சாறு எடுக்கும் இயந்திரம்.
உடம்பார் அழியின் உயிரார் அழிவர் – திருமூலர் திருமந்திரம்

அறுவைச் சிகிச்சையை உவமையாக கூறும் நூல் – கம்பராமாயணம்.
இந்தியனாக இருப்பதைக் காட்டிலும் மனிதனாக இருப்பதே பெருமைக்குரியது. – காந்தியடிகள்

“அனைத்து இழப்பினும் உண்மையை இழக்கவில்லை” – அரிச்சந்திரன்

திருக்குறளை மொழிபெயர்த்த உருசிய அறிஞர் தால்கதாய் (டால்ஸ்டாய்)

“பகைவனிடமும் அன்பு காட்டு” என்று கூறும் நூல் 'பைபிள்'

அறநெறியாகப் போற்றப்பட வேண்டியவை – எளிமையும், சிக்கனமும்

தானோக்காது எத்துயரம் செய்திடினும் தார்வேந்தன்
கோனோக்கி வாழும் குடிபோன்று இருந்தேனே – குலசேகர ஆழ்வார்

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும் – இராமலிங்க வள்ளலார்

கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும்
கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப்போக” – வள்ளலார்

ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்
ஒருமையுளர் ஆகிய உலகியல் நடத்தல் வேண்டும் – வள்ளலார்

இராமலிங்கர் சத்திய தருமசாலையை நிறுவிய இடம் – வடலூர்

இறவாத நிலை தரும்மொழி தமிழ்மொழி – வள்ளலார்

உங்களுடைய தருமமும் கருமமும் உங்களைக் காக்கும் – அயோத்திதாசப் பண்டிதர்

வெறுங்கை என்பது மூடத்தனம், விரல்கள் பத்தும் மூலதனம் – தாராபாரதி

வினையே ஆடவர்க்கு உயிர் – குறுந்தொகை

முன்நீர் வழக்கம் மகடூஉவோடில்லை – தொல்காப்பியம்

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே – திருமூலர்

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் – நாமக்கல் கவிஞர்

மக்களுக்கான நூலகங்களை முதன் முதலாகத் தொடங்கியவர்கள் – கிரேக்கர்கள்

கல்கத்தா தேசிய நூலகம் இந்தியாவில் முதன்மையானது.

நூலகப் பயன்பாட்டு விதிகளை உருவாக்கியவர் – சீர்காழி ஆர்.அரங்கநாதன்.

இந்தியாவில் மொத்தம் 4 மொழிக் குடும்பங்கள் உள்ளன.

இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை 325

இந்திய நாட்டின் மொழிகளின் அருங்காட்சியகம் என்று குறிப்பிட்டவர் ச.அகத்தியலிங்கம்

தனிச்சிறப்பும், பலமொழிகள் தோன்றி வளர அடிப்படையாகவும் உள்ள மொழி மூலமொழி ஆகும்.

தமிழ் என்ற சொல்லிலிருந்து திராவிடம் என்ற சொல் உருவானது என்றவர் ஈராஸ் பாரதியார்.

தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை – பாரதிதாசன்

நீடுதுயில் நீக்கப்பட்டி வந்த நிலா எனப் பாராட்டப் பெற்றவர் – பாரதியர். பாராட்டியவர் – பாரதிதாசன்.

மங்கையராய் பிறப்பதற்கே நல்ல
மாதவம் செய்திட வேண்டும் – கவிமணி

தமிழன் என்றோர் இனமுண்டு
தனியே அதற்கோர் குணமுண்டு – நாமக்கல் இராலிங்கனார்.

அமெரிக்க கவிஞர் வால்விட்மனின் “புல்லின் இதழ்கள்” என்ற நூலின் சாயலில் பாரதியார முதன் முதலில் வசனகவிதை எழுதினார்.

புதுக்கவிதை வளர்ச்சியில் வல்லிக்கண்ணனின் பங்கு போற்றத்தக்கது.
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை – கண்ணதாசன்

“உண்பது நாழி உடுப்பை இரண்டே” – புறநானூறு
“செல்வத்துப் பயனே ஈதல்” – புறநானூறுவாழ்க்கையில் இழப்பு என்பதே இல்லை, ஒன்று போல் இன்னொன்று வரும்,   அந்த நம்பிக்கை இருந்தால் 
வாழ்க்கை வெறுமையாகாது – கெலன் கெல்லர்.
  • ஈன்ற ஒருத்தியையும் பிறந்த நாட்டையும் பேசும் மொழியையும் ஒருவன் தாய்,      தாய், தாய் என்று போற்றுகின்றான் – திரு.வி.க.
  • “உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தாரே” -இவ்வடி புறநானூறு, மணிமேகலை இரண்டிலும் வருகிறது.மீதூண் விரும்பேல் – ஒளவையார்
  • பெற்றதை வழங்கி வாழும் பெருங்குணம் பெறுதல் இன்பம் – சுரதா
  • நகையுள்ளும் இன்று இகழ்ச்சி – திருக்குறள்
  • நகல்லவர் அல்லர்க்கு பகலும் இருட்டாக இருக்கும் – திருக்குறள்
  • வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் – வள்ளலார்.


Post a Comment

0 Comments